ஆகஸ்டு 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகஸ்ட் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXV |
ஆகஸ்டு 18 (August 18) கிரிகோரியன் ஆண்டின் 230 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1201 - லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.
- 1868 - பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
- 1877 - செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1891 - மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.
- 1917 - கிறீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1924 - பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
- 1928 - சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
- 1938 - நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.
- 1950 - பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.
- 1958 - விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
- 1971 - வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.
- 1983 - டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1750 - அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையறிஞர் (இ. 1825)
- 1975 - பிள்ளையான், இலங்கை அரசியல்வாதி, முன்னாள் போராளி
இறப்புகள்[தொகு]
- 1227 - செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசின் மன்னன்
- 1850 - ஹோனர் தெ பல்ஸாக், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1799)
- 1945 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், (பி. 1897)
- 2009 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (பி. 1924)