டிசம்பர் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXV |
டிசம்பர் 10 (December 10) கிரிகோரியன் ஆண்டின் 344 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 345 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1041 - பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
- 1541 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தொமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.
- 1684 - ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.
- 1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.
- 1817 - மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
- 1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.
- 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
- 1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
- 1902 - அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
- 1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
- 1906 - அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
- 1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பிலிப்பீன்சை அடைந்தனர்.
- 1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
- 1975 - ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.
- 1984 - தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
- 2006 - ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1804 - ஜேகோபி, ஜெர்மானிய கணிதமேதை. (இ. 1851)
- 1851 - மெல்வில் டியூவி - அமெரிக்கா. நூலக அறிவியலை வளர்த்தவர். (இ. 1931)
- 1878 - ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)
- 1891 - நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1970)
- 1934 - ஹவர்டு மார்டின் டெமின் - அமெரிக்கா. வைரசுகளைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 1975இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். (இ. 1931)
இறப்புகள்[தொகு]
- 1896 - அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1833)
- 1960 - சேர் சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர் (பி. 1899)
- 1987 - சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (பி. 1948)
- 2001 - அசோக்குமார், இந்திய நடிகர் (பி. 1911)
- 2006 - ஆகுஸ்டோ பினோச்சே, சிலி நாட்டு சர்வாதிகாரி (பி. 1915)
சிறப்பு நாள்[தொகு]
- மனித உரிமைகள் நாள்
- நோபல் பரிசு அளிக்கும் வைபவம்
- தாய்லாந்து - அரசியலமைப்பு நாள் (1932)