மே 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | மே 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXV |
மே 4 (May 4) கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1493 - திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
- 1494 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
- 1626 - டச்சு பயணி பீட்டர் மின்யூயிட் மான்ஹட்டன் தீவை அடைந்தார்.
- 1799 - நான்காம் மைசூர்ப் போர்: திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
- 1814 - பிரான்ஸ் மன்னன் முதலாம் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் எல்பா தீவை அடைந்தான்.
- 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றும் நோக்கில் 60 பேருடன் சான் பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்பட்டார்.
- 1886 - ஹேமார்க்கெட் கலகம்: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 1904 - பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1912 - ரோட்ஸ் என்ற கிரேக்கத் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.
- 1919 - மே நான்கு இயக்கம்: சீனாவின் பகுதிகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
- 1924 - பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- 1930 - பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானினால் முதல் நாள் ஆக்கிரமிக்கப்பட்ட துளகி தீவின் (சொலமன் தீவுகள்) மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: வடக்கு ஜெர்மனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
- 1949 - அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
- 1949 - இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
- 1973 - சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது.
- 1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
- 1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் போர்க்கப்பல் ஒன்று ஆர்ஜெண்டீனாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1994 - இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
- 2000 - லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.
- 2002 - நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1767 - தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
- 1945 - என். ராம், இந்தியப் பத்திரிகையாளர்
- 1983 - த்ரிஷா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை
இறப்புகள்[தொகு]
- 1799 - திப்பு சுல்தான், மைசூர் மன்னன் (பி. 1750)
- 1879 - சேர் முத்து குமாரசாமி, இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
- 1949 - எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் (பி. 1925)
- 1980 - டீட்டோ, யூகோஸ்லாவியாவின் அதிபர் (பி. 1892)
சிறப்பு நாள்[தொகு]
- அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
- நெதர்லாந்து - இறந்தவர்கள் நினைவு நாள்
- சீனா - இளைஞர் நாள் (青年节, மே நான்கு இயக்கம் நினைவு - 1919)