ஏப்ரல் 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | ||
MMXV |
ஏப்ரல் 14 (April 14) கிரிகோரியன் ஆண்டின் 104 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 105 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 261 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1699 - கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
- 1828 - நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
- 1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
- 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
- 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
- 1912 - பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.
- 1915 - துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
- 1944 - பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.
- 1978 - ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
- 1986 - மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 1986 - வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 - சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
- 1999 - யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 1999 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
- 2007 - தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1126 - இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)
- 1629 - கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர் (இ. 1695)
- 1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956)
- 1919 - சம்சாத் பேகம், இந்தியப் பாடகி (இ. 2013)
- 1922 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)
- 1927 - பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)
- 1935 - எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து எழுத்தாளர்
இறப்புகள்[தொகு]
- 1759 - ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)
- 1904 - வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)
- 1950 - இரமண மகரிசி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879)
- 1962 - மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர் (பி. 1860)
- 1963 - ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)
- 1964 - ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
- 1986 - சிமோன் ட பொவார், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1908)
- 2013 - பி. பி. ஸ்ரீனிவாஸ், இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)