இலங்கை இறுதிப் போரில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் ‘ஜப்பான் டைம்ஸ்’
June 5, 2010
இலங்கையில் வன்னி பகுதியில் நடைபெற்ற இறுதிப் போரின் போது சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று ‘தி ஜப்பான் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதிக்காததால், கொல்லப்பட்ட மக்கள் குறித்து துல்லியமான எண்ணிக்கை தெரியாது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் அந்த தகவலை மேற்கொள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை அரசு தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்படாமல் இருப்பதால், அதனால் போர்முனை வெற்றியை தக்க வைக்க இயலாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Got something to say?
You must be logged in to post a comment.