சிப்பிக்குள் முத்தாய் இருந்தது போதும் !
சிந்தனைக்குச் சாவி கொடுங்கள் !
சிறகு முளையாச் சிறு கிள்ளைகளே !
வான்வெளியின் வாசல்கள் இங்கே விரிந்துள்ளன !
வாருங்கள் !
வெற்றிவானினூடாகப் பறந்து செல்லுங்கள்.
AUT-UTSAV : இங்கு ஒவ்வொரு மேடையும் ஒரு போர்களமே! மாதக் கணக்கான உழைப்பையும், வியர்வையையும் நீவிர் வித்தாக விதைத்தீராயின், சிறப்பிலும் வெகு சிறப்பான உங்கள் படைப்புகள் இங்கு வெற்றி வாகை சூடும்.
இதுவரை மாணவர்களுக்கு சரியான விகிதத்தில் கல்வி, அனுபவம், ஒழுக்கம் ஆகியவற்றை வழங்கி நற்பெயரை ஈட்டி, அவற்றின் மூலம் நவீன உலகில் மாணவர்களின் வெற்றிக்கு வித்திட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியின் மணிமகுடத்தில் ' AUT-UTSAV' மற்றுமொரு முத்தாய் மிளிரும்.
மனம் மயக்கும் மிடற்றிசையோ !
கண்கவரும் நடன அசைவோ !
மனதின் எண்ணங்களை வண்ணங்களாக்கும் ஓவியக் கலையோ !
வையகத்தை வெல்லும் வாதத்திறமையோ !
உங்கள் திறமை எதுவாயினும்
உலகறிய இங்கு அரங்கேற்றலாம்.
நினைவில் கொள்ளுங்கள் !
எங்கள் மேடையில் திறமைக்கே பெருமை !
அப்பெருமைக்கே மகுடம் !
'AUT-UTSAV' 23 மார்ச் 2011 வரை நடக்க இருக்கிறது. இப்போட்டிகள் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி (முதன்மை வளாகம்), மற்றும் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி்யின் அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை ஆகிய உறுப்பு வளாகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
உங்கள் திறமைகளை வெளிக்காட்டி உங்கள் படைப்பாற்றலையும், அறிவாண்மையையும் நிரூபிக்க அழைக்கின்றோம்.
ஏன் தயக்கம்..? இனியும் காத்திருப்பது எதற்காக.....?
எழுமின் !
விழிமின் !!
நடை இடுமின்!!!