தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று (27) தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டனர்.
இன்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதைனையடுத்து, 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும், ஒரே நேரத்தில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.
மேலும் அதே நேரம் ஜேர்மன் தேசம் முழுவதும் மாவீரர் தினம் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.