நயின் சிங் ராவத் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்உலகின் மிகப்பெரிய இமாலய பனிமலையை அளந்தவர் என்ற பெருமைக்குரிய மனிதர் நயின் சிங் ராவத் அவர்களின் 107வது பிறந்த நாளை கூகுள் டூடுல் கொண்டாடுகின்றது.

நயின் சிங் ராவத்

நயின் சிங் ராவத் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

அக்டோபர் 21, 1880 ஆம் ஆண்டில் பிறந்த நயின் சிங் ராவத் இந்தியாவிலிருந்து நேபாளம் வழியாக திபெத் மற்றும் திபெத்திய நதி சங்போவின் பிரதான பிரிவு ஆகியவற்றின் மூலம் வணிக வழியை மாற்றியமைத்தார். மேலும் தீபெத்தில் அமைந்துள்ள லாசா நகரின் இருப்பிடத்தையும், உயரத்தையும் முதன்முறையாக கண்டறிந்தவர் ஆவார்.

இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, மாண்கோமெரி இரு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். இதில் ஒருவர்தான் தொடக்கத்தில் நாம் சந்தித்தவர். பெயர் நயின் சிங் ராவத். மற்றொருவர் மணி சிங்.

நயின் சிங் ராவத், மேல் இமயத்தில் உள்ள மிலம் என்ற கிராமத்தின் பள்ளி ஆசிரியர். மணி சிங் இவரது ஒன்று விட்ட சகோதரர்.

மாண்கோமெரி இந்த இரு சகோதரர்களுக்கும் 1863 இல் கடுமையான பயிற்சி அளித்தார். பின் நாளில் இதுவே சர்வேயர்களுக்கானப் பயிற்சி முறையாக மாறியது.

இருவருக்கும் அளவிடப்பட்ட, ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி அளிக்கப் பட்டது. சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பார்கள். இரு காலடிகளுக்கு இடைப்பட்ட தூரம் எப்பொழுதுமே 33 அங்குலம்தான். இந்த அளவு மாறவே மாறாது. அப்படி ஒரு பயிற்சி.

நடக்கும் பொழுது தூரத்தைக் கணக்கிட கையில் ஜெபமாலை. வழக்கமான 108 மணிகளுக்கு பதில், இதில் 100 மணிகள். நூறு முறை காலடி எடுத்து வைத்தபின், ஜெபமாலையின் ஒரு மணியை நகர்த்துவார். ஜெபமாலையில் ஒரு முழு சுற்று, சுழற்றி முடிந்தால், 100 x 100  = 10,000 பாத அடிகளைக் கடந்ததாகப் பொருள். அதாவது ஐந்து மைல்.

நயின் சிங் ராவத் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

தேநீர் கிண்ணத்தில் இருக்கும் பாதரசம், தொடுவானைக் கண்டுபிடிக்க உதவும். ஊன்று கோலில் வெப்பமாணி இருக்கிறதல்லவா? நண்பர்களே, அது எதற்குத் தெரியுமா?

கொதிக்கும் தேநீரில் வெப்ப மாணியை விட்டு, அந்த இடத்தின் உயரத்தைக் கணக்கிடுவார். ஆமாம் நண்பர்களே, கடல் மட்டத்தில் இருந்து, உயரே செல்லச் செல்ல, தண்ணீரின் கொதிநிலைப் புள்ளியானது மாறிக் கொண்டே இருக்கும். இந்த கொதி நிலைப்  புள்ளியைக் கொண்டே, உயரத்தைக் கணக்கிடலாம். எளிமையான வழிமுறைதான், ஆனாலும் நம்பகமானது.

திபெத்திய லாமாக்கள், பிரார்த்தனைச் சக்கரம் ஒன்றினை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். அது ஒரு புனிதப் பொருள். அதனைச் சுற்றிலும்,ஓம் மனே பாத்மே ஹம் என்னும் மந்திரச் சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த மந்திரச் சக்கரத்திற்குள்தான், நயின் சிங்கின் பயண வரைபடம், கடந்து வந்த பாதை, உயரம், நில அடையாளங்கள் முதலான நுட்பமான குறிப்புகள் ஒளித்து வைக்கப் பட்டன.

1865 இல் திபெத்திய எல்லையைக் கடந்து, நேபாளத்தை அடைந்த பிறகு, இருவரும் பிரிந்தனர் நயின் சிங், லாசாவை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

நண்பர்களே, நயின் சிங் ஒரு நாள், இரு நாள் அல்ல, ஒரு வருடம் நடந்து, கணக்கிட்டுக் கொண்டே நடந்து, குறிப்பெடுத்துக் கொண்டே நடந்து, உயரத்தை அளந்து கொண்டே நடந்து, 1866 இல் தடைவிதிக்கப் பட்ட நகரமான லாசாவைச் சென்றடைந்தார்.

நயின் சிங் ராவத் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

ஏப்ரலில் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியா திரும்பினார். டேராடூனில் உள்ள சர்வே தலைமையகத்தை 1866 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் அடைந்தார்.

1867 இல் மீண்டும் ஒரு முறை பயணம். திபெத்திய பகுதிகளை ஆராய்ந்தார். 1873 இல் காஷ்மீரில் தொடங்கி, இரண்டாண்டு பயணம் செய்து 1875 இல் லாசாவை அடைந்தார். இவருடைய வரைபடங்கள்தான், இமய மலைப் பகுதிகளுக்கான துல்லியமான வரைபடங்களாக, அடுத்த அரை நூற்றாண்டு வரை நீடித்தது.

டேராடூனில், நயின் சிங்கின் பாதைக் கணக்கெடுப்புகள் ஒன்றிணைக்கப் பட்டு, மெல்ல மெல்ல துல்லியமான வரைபடங்களாக உருவம் பெற்றது.

1868 இல் ராயல் புவியியல் அமைப்பானது நயின் சிங்கிற்கு, தங்க முலாம் பூசப்பட்ட கால மாணியை பரிசாக வழங்கிப் பாராட்டியது. 1876 ஆம் ஆண்டு நயின் சிங்கின் பெயரும் புகழும் உச்சத்தை அடைந்தது. புவியியல் இதழானது அவரது சாதனைகளை உலகிற்கு அறிவித்தது.

2004 ஆம் ஆண்டில் ஜுன் 27 இல் இந்திய அரசானது, நயின் சிங் நினைவாக, தபால் தலை ஒன்றினையும் வெளியிட்டது.

ஆங்கிலேயர்களால் முடியாத செயலை, தன் உயிரையும் துச்சமாக மதித்து, சாதித்துக் காட்டிய, நயின் சிங்கை இன்று யாரும் அறிய மாட்டார்கள். கால ஓட்டத்தில் கரைந்து விட்டார்.

நயின் சிங் ராவத் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

கல்கத்தாவில் அலுவலகத்தில் அமர்ந்து, சட்டையின் மடிப்பு கூட, கலையாமல், நயின் சிங்கின் சர்வே பணிகளை நிர்வகித்தாரல்லவா, ஓர் ஆங்கிலேய அதிகாரி, அவரின் பெயர், சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்து விட்டது. ஆம், அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயரைத்தான், இமயத்தின் உயர்ந்த மலை முகட்டிற்குப் பெயராகச் சூட்டினார்கள்.

அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயர் என்ன தெரியுமா? ஜார்ஜ் எவரெஸ்ட்.

உதவி – கரந்தை ஜெயக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here