இன்று ஆடி கடைசி செவ்வாய்: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது
ஆடிப்பூர விழாவான நாளை பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும்.
குமரி மாவட்ட மக்களின் சார்பாக ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கைகளை முன் வைத்த விஜய் வசந்த்
திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 8 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை சம்பவம் குறித்து 8 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆமை ஓடுகள், மான்கொம்புகள் பறிமுதல்
குமரியில் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆமை ஓடுகள், மான்கொம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றுவதா? -விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்
மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து கொண்டு எதிர்க்கட்சிகளை போராட்டம் நடத்தி வெளியே அனுப்பிவிட்டு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதாக விஜய் வசந்த் எம்பி கண்டனம் தெரிவித்தார்.
பெகாசஸ் விஷயத்தில் மத்திய அரசு தவறை ஒத்துக்கொள்கிறது -விஜய் வசந்த் எம்.பி.
மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தகவல் தர மறுப்பதன் மூலம் அவர்கள் பக்கம் தவறு இருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்தார்.
தூய்மை பணியாளருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்த விஜய் வசந்த்
கொரோனா காலத்தில் அரும்பணியாற்றிய ரெயில்வே தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நடைபெற்றது.
ஒரே இடத்தில் 5 பேருக்கு தொற்று: தக்கலை பகுதியில் மீண்டும் பரவும் கொரோனா
ஒரே பகுதியில் 5 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது தக்கலை பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - லாரி டிரைவர் கைது
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கார் மோதி கல்லூரி மாணவர் பலி - மோட்டார் சைக்கிளில் சென்ற போது தடுமாறி விழுந்தனர்
ஆற்றூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தடுமாறி விழுந்ததில், கார் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நாகர்கோவிலில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருடிய மோட்டார் சைக்கிள்களுக்கு போலி நம்பர் பிளேட் பொருத்தி விற்பனை - 8 பேர் கைது
திருடிய மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஆடி அமாவாசை: கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை
கொரோனாவைரஸ் 3-வது அலை சுற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 3 பேருக்கு கொரோனா
கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
குமரியில் சாரல் மழை- குழித்துறையில் 7.2 மி.மீ. பதிவு
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.51 அடியாக உள்ளது. அணைக்கு 24 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் வென்றது.
முக்கடல் அணை பூங்காவில் சிறுத்தை நடமாட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தான் முக்கடல் அணை உள்ளது. இதனால் இங்கு வனவிலங்குகள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம்
குமரி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற நபர்களிடம் மாநில எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன அனுமதி ஆணையை சரிபார்த்து உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பாரதிய ஜனதா நிர்வாகிகள் 450 பேர் மீது வழக்கு
நட்டாலம் மகாதேவர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடர்சிங் உள்பட 65 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரியில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று விசை படகுகள் எதுவும் கடலுக்கு செல்லவில்லை.