பெண் சடலங்களை தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை…கல்லறைகளுக்கு பூட்டு

பிணங்களை கூட விட்டுவைக்காமல் அதனை தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

2020ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உகாரா எனும் இடத்தில் பெண் பிணத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர் கையும் களவுமாக பிடிப்பட்டார். 2021ம் ஆண்டு குலாமுல்லா என்னும் ஊருக்கு அருகில் 18 வயது பெண்ணிற்கு இதே கொடுமை நடந்துள்ளது.

இதன் காரணமாக பெண்களின் கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கதவமைத்து பூட்டி வைக்கின்றனர். பாகிஸ்தானில் 40 சதவீத பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.